தங்கள் பார்வையில் பெரியார்- அண்ணா- எம்.ஜி.ஆர்.?
சினிமா
" பெரியார் இல்லையென்றால் மைல் கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாக ஆகியிருக்கும். பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவரே காரணம். மனிதனை மனிதனாக வாழச் செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித சமுதாயத் தலைவர் இவர்தான்.
பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை செயல்படுத்தியவர் அண்ணா. அரசியல் ரீதியாகத் தமிழுணர்வை ஊட்டியவர் அவர். சுருக்கமாகச் சொன்னால் பக்குவமான- பண்படுத்தப்பட்ட நஞ்சை நிலம் போன்றவர். இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்- அவர் சாதனையை எடுத்துக்காட்ட!
எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப் போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "
- கவிஞர் முத்துலிங்கம்






















