TamilsGuide

அமெரிக்காவில் வரலாறு காணா வகையில் உயர்வை கண்டது எரிபொருள் விலை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு கலன் 03 டொலரை கடந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' ஊடான கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடி நிலையினால் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 05 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இதன் நேரடித் தாக்கம் அமெரிக்க நுகர்வோரைப் பாதித்துள்ளதுடன், அங்கு பெற்றோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய பதற்றமான சூழல் நீடித்தால், இந்த வார இறுதிக்குள் அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலனுக்கு 3.25 டொலர் வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment