மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கடந்த கால தொடர்புகளை “பெரிய தவறு” என ஒப்புக்கொண்டு, தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களில், மின்னஞ்சல்கள், நேர்காணல் டிரான்ஸ்கிரிப்டுகள், புகைப்படங்கள் மற்றும் அழைப்பு பதிவுகள் அடங்கியுள்ளன.
இதில் பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் தொடர்புடையவர்களாக குறிப்பிட்டுள்ளனர், பில் கேட்ஸும் அவர்களில் ஒருவராக உள்ளார்.
டவுன் ஹால் கூட்டத்தில், கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் இரண்டு தனிப்பட்ட உறவுகள் இருந்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், அவை எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையதாக இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் நேரத்தை செலவிட்டது மற்றும் மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை சந்திப்புகளில் ஈடுபடுத்தியதை ஒரு பெரிய தவறாக ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரினார்.
அவர் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களோடு நேரத்தை செலவிடவில்லை என்றும் கூறினார்.
கேட்ஸ் 2014 வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், அவரது தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவர் உடன் நேரம் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றது இல்லை என்றும் உறுதிப்படுத்தினார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் கேட்ஸ் போஸ் கொடுத்துள்ளதாகக் காணப்படுகிறது, இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.


