TamilsGuide

ஊடகத்திற்கு கருத்து வழங்கும்போது மயங்கி விழுந்த தாயார்

அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டு கொ* லை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் அ.அருள்பாயஸுக்கு நீதி வேண்டி இன்று யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதன்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த சிறுவனின் மாமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment