TamilsGuide

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறு போட்டிகள்

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெண்கரம் அமைப்பினால் பல்வேறுவிதமான போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வலிகாமம் மேற்கு பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை, கதை கூறல் மற்றும் பேச்சு போட்டிகள் என்பன நடாத்தப்பட்டு வருகின்றன.

நேற்றுமுன்தினம் அராலி முத்தமிழ் சனசமூக நிலையத்திலும், நேற்றையதினம் சித்தங்கேணி சிறிகணேசா வித்தாயாலயம் மற்றும் சித்தங்கேணி வெண்கரம் அலுவலகம் ஆகியவற்றில் இந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.

கட்டுரை போட்டியில் மாணவர்களால் படைக்கப்பட்ட சிறந்த ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு, தொகுக்கப்பட்டு அவை நூலாக வெளியிடப்படவுள்ளன. மேலும் இந்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment