TamilsGuide

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இதன்போது, அவரது பிணை கோரிக்கை தொடர்பான கட்டளை இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார அறிவித்திருந்தார்.
 

Leave a comment

Comment