TamilsGuide

நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் 16 முதல் 18ம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, 2025 நவம்பரில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் நேரில் பார்வையிடுவார்.

அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடுவார்.

சூறாவளி பாதிப்பிலிருந்து நாடு மீண்டு வரவும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும், அவர் ஆலோசிப்பார்.

முன்னதாக, சூறாவளி அனர்த்தத்தைத் தொடர்ந்து, கடந்த டிசம்பரில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சுமார் 206 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டிட்வா சூறாவளியினால் இலங்கைக்கு சுமார் 6 – 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment