TamilsGuide

வவுனியாவில் சினிமா பாணி சேஸிங் - கப்ரக வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 20 கிலோ கஞ்சா மீட்பு

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் வவுனியாவில் இன்று ஒரு அதிரடி வேட்டை அரங்கேறியுள்ளது. ரகசியத் தகவல், மின்னல் வேகத் தடுப்பு, கச்சிதமான கைது என வவுனியா பொலிஸார் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.

நடந்தது என்ன? 

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி ஒரு சொகுசு 'கப்ரக' (Cab) வாகனம் சந்தேகத்திற்கிடமான முறையில் வருவதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பிரிவினருக்கு 'ஹாட்' டிப்ஸ் கிடைத்தது. உடனே களமிறங்கிய பொலிஸ் குழுவினர், குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதிர்ந்து போன பொலிஸார்📦.

மேலோட்டமாகப் பார்த்தால் சாதரணமாகத் தெரிந்த அந்த வாகனத்தின் உட்பகுதியைத் தட்டியபோதுதான் கடத்தல்காரர்களின் கைவரிசை அம்பலமானது. வாகனத்தின் சூட்சுமமான மறைவிடங்களில் இருந்து சுமார் 20 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கப்பட்டன.

சிக்கிய 'முக்கிய புள்ளிகள்' 👥

இந்த விவகாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல்:- பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம்.

விசாரணை:- இந்த நெட்வொர்க் பின்னணியில் உள்ள 'மாஸ்டர் மைண்ட்' யார் என்பது குறித்து பொலிஸார் தற்போது துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

"வவுனியா மண்ணுக்குள் போதைப்பொருள் நுழைய விடமாட்டோம்" என பொலிஸ் தரப்பு மீண்டும் ஒருமுறை இந்தச் சம்பவத்தின் மூலம் நிரூபித்துள்ளது.
 

Leave a comment

Comment