போலி மின்னஞ்சல்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை
இலங்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மின்னஞ்சல் முகவரி என்று பொய்யாகக் கூறி வெளியிடப்படும் ஒரு மோசடி மின்னஞ்சல் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த மின்னஞ்சல்கள் தமது திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதை சிஐடி உறுதிப்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, போலியான செய்திகள் noucinatacha20@gmail.com மற்றும் police.cid.lk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதாகவும், பெறுநர்களை தவறாக வழிநடத்துதல், நிதி மோசடி செய்தல் அல்லது சட்டவிரோதமாக தனிப்பட்ட தகவல்களைப் பெறுதல் போன்ற வெளிப்படையான நோக்கங்களுடன் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க சிஐடி விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், குறிப்பிடப்பட்ட முகவரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனிப்பட்ட அல்லது ரகசியத் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.






















