இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அவுஸ்திரேலிய வருகையை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிட்னியில் மோதல்கள் வெடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (10) அவுஸ்திரேலியத் தலைவர்கள் அமைதியை வலியுறுத்தி போராட்டக்காரர்களை அமைதியாக இருக்குமாறு அழைப்பு விடுத்தனர்.
திங்கள்கிழமை மாலை சிட்னியின் டவுன் ஹால் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை அகற்ற பொலிஸார் சென்றபோது வன்முறை வெடித்தது.
இதையடுத்து அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் 10 பேர் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டதாக சிட்னி காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வன்முறையால் “பேரழிவிற்கு ஆளானதாக” கூறினார்.
மேலும் போராட்டக்காரர்கள் தங்கள் கருத்துக்களை அமைதியாக வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேவேளை கடந்த டிசம்பரில் பாண்டி கடற்கரையில் நடந்த யூத மத நிகழ்வில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹெர்சாக் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருவதை எதிர்த்து திங்களன்று மத்திய சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.


