TamilsGuide

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ குறித்து விசாரணகைள் ஆரம்பம்

பாலியல் குற்றவாளி மற்றும் நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்ததாக சர்ச்சைக்குள்ளான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது, அரசின் வர்த்தக தூதராக இருந்தபோது ரகசிய தகவல்களை பகிர்ந்தாரா என பொலிஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாதம் அமெரிக்க நீதி துறை வெளியிட்ட மின்னஞ்சல் ஆவணங்களின் பின்னர், 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் சிங்கப்பூர், சீனா, ஹாங்காங் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான தனது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயண அறிக்கைகளை எப்ஸ்டீனுக்கு அனுப்பியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு முன், மற்றொரு பெண் எப்ஸ்டீன் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு 2010ஆம் ஆண்டு ஆண்ட்ரூவின் Royal Lodge இல்லத்தில் பாலியல் சந்திப்பு நடந்ததாக கூறிய புகாரையும் அதே பொலிஸ் துறை ஆய்வு செய்துவருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த பெண் அப்போது 20-களில் இருந்தவர்; அவர் பிரிட்டிஷ் குடியுரிமையாளர் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, 2010 அக்டோபர் 7 அன்று, அப்போது இளவரசராக இருந்த ஆண்ட்ரூ, சிங்கப்பூர், வியட்நாம், சீனாவின் ஷென்ழென் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களுக்கு மேற்கொள்ளவிருந்த அதிகாரப்பூர்வ பயண விவரங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

அந்த பயணத்திற்குப் பின்னர், நவம்பர் 30 அன்று, தனது சிறப்பு உதவியாளர் அமித் பட்டேல் அனுப்பிய அதிகாரப்பூர்வ அறிக்கைகளை பெற்ற ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அவற்றை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்த ஆவணங்களில் பிரிட்டிஷ் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான சந்தை-அதிக நுணுக்கமான தகவல்கள் இருந்தனவா அல்லது அவர் Official Secrets Act-இல் கையொப்பமிட்டிருந்தாரா என்பது தெளிவாகவில்லை.

அரசு வழிகாட்டுதலின்படி, வர்த்தக தூதரின் பொறுப்பில் நுணுக்கமான வணிக, அரசியல் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கடமை உள்ளது.

அந்த கடமை பதவி காலாவதியான பிறகும் தொடரும் எனவும், Official Secrets Acts 1911 மற்றும் 1989 சட்டங்கள் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் “ஆழ்ந்த கவலை” வெளியிட்டுள்ளனர். 
 

Leave a comment

Comment