போர்ச்சுக்கல் நாட்டில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 66.8% வாக்குகள் பெற்று ஆளும் மிதவாத இடதுசாரி சோசலிச கட்சியை சேர்ந்த அந்தோனியோ ஜோஸ் செகுரோ வெற்றி பெற்றுள்ளார்.
வலதுசாரியான Chega கட்சியின் வேட்பாளர் ஆன்ட்ரே வெஞ்சுரா 33.2% வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் செகுரோ சுமார் 3.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இது போர்ச்சுக்கல் அதிபர் தேர்தல் வரலாற்றில் 1976-க்குப் பிறகு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகளாகக் கருதப்படுகிறது.
வரும் மார்ச் 9 அன்று அந்தோனியோ ஜோஸ் செகுரோ புதிய அதிபராகப் பதவியேற்பார். இவர் தற்போதைய அதிபர் மார்செலோ ரிபெலோ டி சூசா-வின் பின்னோடியாக பொறுப்பேற்பார்.
வலதுசாரிகள் பெரிய வித்தியாசத்தில் தோற்றபோதும் முந்தய தேர்தல்களை விட அவர்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இது அந்நாட்டில் வலதுசாரிகள் வலுப்பெற்று வருவதை குறிக்கிறது.


