TamilsGuide

கியூபாவில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டரில் 5.5 ஆக பதிவு

கியூபாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் முதலில் 5.9 ஆக பதிவான இந்நிலநடுக்கம் பின்னர் 5.5 ஆக உறுதி செய்யப்பட்டது.

இது 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலத்தின் மேல் பகுதியை ஒட்டி ஏற்பட கூடிய நிலநடுக்கம், அடுத்தடுத்த பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய சாத்தியம் உள்ளது.

இதனை ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திபெத் மற்றும் மியான்மர் நாடுகளில் முறையே ரிக்டர் அளவுகோலில் 4.4 மற்றும் 4.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.
 

Leave a comment

Comment