TamilsGuide

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்

இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற 744,500 மருந்து மாத்திரைகளை (Pregabalin Capsules) ஏற்றிச் சென்ற ஒரு லொறியுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 32 வயதுக்குட்பட்ட கல்பிட்டி மற்றும் கோலைகனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டடுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேக நபர்கள், மருந்து மாத்திரைகள், சந்தேக நபர்கள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
 

Leave a comment

Comment