TamilsGuide

டொராண்டோவில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி

டொராண்டோ நகரின் எடோபிகோக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு ஆண் பாதசாரி உயிரிழந்ததாக டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து, கிப்லிங் அவென்யூவிற்கு மேற்கே உள்ள டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் அகார்ன் அவென்யூ சந்திப்பிற்கு அருகே இடம்பெற்றுள்ளது.

வாகனம் ஒன்று ஒரு நபரை மோதியதாக வந்த தகவலின் பேரில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் 28 வயதுடைய ஆண் ஒருவர் கடுமையாக காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் தொடர்புடைய வாகனமும் அதன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு, வாகன ஓட்டுநருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.

பாதசாரி சாலை கடக்கும் போது குறிப்பிட்ட கடக்கும் பாதையில் (crosswalk) இருந்தாரா என்பதும், இந்த விபத்தில் வேகம் ஒரு காரணமா என்பதும் தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கு சாட்சியாக இருந்தவர்கள் அல்லது அந்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள், தங்களிடம் டாஷ்கேம் வீடியோ இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment