TamilsGuide

விஜய் தேவரகொண்டா புதிய படம் ரணபலி

விஜய் தேவரகொண்டா தனது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னதாக ஆங்கிலேயர் இந்தியர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும். இந்த நிலையில் இந்த படத்திற்கான டைட்டிலை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியது. ராகுல் சங்கிரித்யான் இயக்க, அஜய்-அதுல் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.
 

Leave a comment

Comment