TamilsGuide

பேசும் படம் பத்திரிக்கையில் நடிகர் திலகம் பற்றிய சுவையான செய்திகளில் ஒரு பகுதி 

டிசம்பர் 1966 பேசும் படம் பத்திரிக்கையில் எல்லாம் வல்லவர் என்ற தலைப்பில் வெளிவந்த நடிகர் திலகம் பற்றிய சுவையான செய்திகளில் ஒரு பகுதி

திரைப் படத் துறையில் நடிப்பைப் பொருத்த வரையில் ஈடு இணையற்ற கதாநாயகனாக விளங்கு பவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர்தான். அவரது வரவுக்குப் பிறகு தான் நடிப்பில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது அவரைப்போல நடக்கவும் நடிக்க வும் பேசவும் முயற்சித்தவர்கள் பலர். அந்த முயற்சி இன்னும் தொடருவதால், அவர் தனித்துப் பிரகாசிக்கிறார் என்பது தெள் ளத் தெளியப் புலனாகிறது

சிவாஜி கணேசன் 1952-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று திரையிடப்பட்ட “பராசக்தி படத்தின் மூலம தமிழ்ப் பட ரசி கர்களுக்கு அறி முகமானார். அதே படத்தின் மூலம் அவர் நக்ஷத்திர நடிகராகவும் மதிக்கப்பட்டார். மற்ற எந்த நடி கருக்கும் கிட் டாத வாய்ப்பு ஒன்று நடிகர் திலகத்திற்கு கிடைத்துள்ளது

பிரதி வருடமும் ஏதாவ தொரு புரட்சிகரமான படத்தில் புதுமையான பாத்திரத்தில் நடித்து தனியே ஒளிவீசுகிறார்,

"பராசக்தி" படத்தில் அவரது நடிப்பும், கணீரென்று தெளிவாக வசனம ் பேசும் திறனும் அவரை நக்ஷத்திர நடிகராக்கி விட்டன.

மறு ஆண்டில் அவர் சில படங் களில் நடித்தார். ஆனாலும் மாடர்ன்தியேட்டச் ஸீன் "திரும்பிப் பார்" படம் ஒரு பரபரப்பை ஏற் படுத்தியது. வில்லனையே கதா நாயகனாகக் கொண்ட அந்தப் படத்தில் காமுக னாகத் தோன்றி அபூர்வ மாக நடித்தார். இந்த இரண்டு படங் களுக்கும் மு. கருணாநிதி வசனம் எழுதி யிருந்தார் . அவரது அழகு தமிழ் வசனங்களை (கடமுடா வசனம் என்றே பலரும் குறிப்பிட்டார்கள்) கவர்ச்சிகரமாகவும் பாவம் குன்றாமலும் பேசி நடிக்கக் கூடியவர் கணேசன் ஒருவர்தான் என்று பலரும் அபிப்பிராயப் பட்டார்கள்

Raja Lakshmi

Leave a comment

Comment