ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பு கடந்த ஆண்டில் உலக நாடுகள் பெற்ற அன்னிய நேரடி முதலீடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா கடந்த ஆண்டு பெற்ற அன்னிய நேரடி முதலீடு 73 சதவீதம் அதிகரித்து 47 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.4.31 லட்சம் கோடி) இருந்தது என தெரிவித்து உள்ளது.
முக்கியமாக, நாட்டின் சேவைகள் மற்றும் உற்பத்தி துறையில் நிகழ்ந்த பெரிய முதலீடுகள் காரணமாகவும், நாட்டை உலகளாவிய வினியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளாலும் இந்த அதிகரிப்பு நிகழ்ந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து இருந்த நிலையில் சீனா தொடர்ந்து 3-வது ஆண்டாக 8 சதவீத சரிவை சந்தித்து உள்ளது. அந்த நாடு கடந்த ஆண்டில 107.5 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


