M.G.R. தனது படங்களின் மூலம் மக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சென்றார். படங்களின் கதை, வசனம், பாடல்கள் மட்டுமின்றி, படத்தின் பெயரே மக்களுக்கு நேர்மறையான, நல்ல செய்திகளை சொல்வதாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். அது ஒரு வியாபாரமும் கூட. நேரடியாகவும் மறைமுகமா கவும் அந்த தொழிலை நம்பி லட்சக் கணக்கானோர் இருக்கின்றனர். அப்படி ஒரு தொழிலாக செய்யும்போது அதை லாப நோக்கோடுதான் செய்யமுடியும். லாபம் வந்தால்தான் அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் பிழைக்க முடியும். அதற்காக படங்களில் மசாலா விஷயங் கள் சேர்ப்பது தவிர்க்க முடியாதது. பொழுதுபோக்கும், வணிக வெற்றிக் கான லாப நோக்கமும் இருந்தாலும் கூட, அதிலும் ஒரு தர்மத்தை கடைபிடித்து சினிமாவின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். பதிய வைத்தார்.
சினிமா திரையரங்கு சென்று படம் பார்க் காதவர்களுக்கு கூட, சுவரொட்டிகளும் படத்தின் பெயரும் கண்களில்படும். எனவே, படத்தின் பெயரே நல்ல கருத்துக் களையும் உழைப்பின் மேன்மையையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். அதன் விளைவுதான் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலை காக்கும்', 'தொழிலாளி', 'விவசாயி' , 'நீதிக்குத் தலைவணங்கு', 'உழைக்கும் கரங்கள்'… என்று நீளும் அவரது படங்களின் பெயர்கள்.
எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.
லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.
''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழு வினர் வியந்தனர்.
'நல்ல நேரம்' படத்தில் உழைப்பின் மேன் மையை வலியுறுத்தும் வகையில் கவிஞர் புலமைப் பித்தன் எழுதிய ''ஓடி ஓடி உழைக் கணும்…' என்ற அற்புதமான சூப்பர் ஹிட் பாடல் உண்டு. எம்.ஜி.ஆரின் அழகும் இளமையும் கூடிய வழக்கமான சுறுசுறுப்பு, காட்சிக்கு கூடுதல் பிளஸ். இந்தப் பாடலில் கவனிக்கத் தவறக் கூடாத ஒரு விஷயம். மக்களுக்கு வித்தை காட்டிக் கொண்டே பாடும் இந்தப் பாடலின்போது, ஒரு இடத்தில் கைகளை தரையில் ஊன்றி எம்.ஜி.ஆர். மூன்று முறை 'பல்டி' அடிப்பார்.அப்போது, அவ ரது உள்ளங்கைகள் தரையில் பதியாது. விரல்களை மட்டுமே ஊன்றிக் கொள்வார். இதை கவனித்துப் பார்த்தால் தெரியும். உடல் எடை முழுவதையும் விரல்களில் தாங்குகிறார் என்றால் அவரது விரல் களுக்கு உள்ள வலிமை புரியும்.
படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்தப் பாடலில் அமைந்த வரிகள்...
'நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும், நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்'


