வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தைப் பரிசாக வழங்கியிருந்தார்.
தற்போது, அந்தப் பதக்கத்தை ட்ரம்ப் தம்மிடமே வைத்துக்கொள்ளப் போவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தப் பரிசு "பரஸ்பர மரியாதையின் ஒரு அற்புதமான அடையாளம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


