கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) வைத்தியர்கள் இன்று (13) வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளைக் காரணம் காட்டி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரை பதவி நீக்கக் கோரியும், அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 2 பொது வைத்தியசாலைகள், 1 போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலை, 52 மாவட்ட வைத்தியசாலை மற்றும் 113 ஆரம்ப மருத்துவ நிலையங்களில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கின்றனர் என்று GMOA நிர்வாகக் குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான வைத்தியர் ஜனித் பெதுருஆராச்சி தெரிவித்தார்.


