வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
இலங்கை
புதுவருடதினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதனை தமிழ் தேசத்திற்கு சொந்தமானவை என்றும் எனவே திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய ஆண்டான இன்றுடன் தமது போராட்டம் 3ஆயிரத்து 237வது நாட்களை தாண்டியும் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருவதக்கவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.






















