மெக்சிகோவில் நேற்று ரெயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரெயில் சுமார் 241 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஓக்ஸாகா மற்றும் வெராக்ரூஸ் எல்லையில் உள்ள நிஜண்டா நகருக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 98 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


