கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தில் ஆரோக்கியமற்ற அளவுகள் பதிவாகின.
அங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) மதிப்புகள் முறையே 92 மற்றும் 100 ஐ எட்டின.
அடுத்த 24 மணிநேரத்திற்கான முன்னறிவிப்புகள் நாடு முழுவதும் AQI அளவுகள் 48 முதல் 112 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகள் மிதமான காற்றின் தரம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகியவை 100–108 மற்றும் 104–112 க்கு இடையில் AQI மதிப்புகளை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகள் “சற்று ஆரோக்கியமற்ற” பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.
மொனராகலை சிறந்த காற்றின் தரத்தைப் பதிவு செய்தது – அங்கு AQI 46 ஆக இருந்தது.
காலை 8:00–10:00 மணி முதல் பிற்பகல் 3:00–5:00 மணி வரை உச்ச நேரங்களில் காற்று மாசுபாடு அதிக அளவுகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.


