யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரம்
நத்தார், புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (23) அன்று இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.






















