TamilsGuide

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய போலாந்து விமானம்

குளிர்காலத்திற்காக போலந்திலிருந்து இலங்கைக்கான முதல் விமானம் நேற்று (23) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது.

ஸ்மார்ட் விங்ஸ் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இந்த விமானம், போலந்தின் வார்சாவிலிருந்து இரவு 10:10 மணிக்கு BIA இல் தரையிறங்கியது.

விமானத்தில் 180 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

அதன்படி, போலந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானங்கள் 2026 மார்ச் 15 வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வார்சாவிலிருந்து கொழும்புக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் வரும் பயணிகள் இலங்கையின் கடலோரப் பகுதிகள், சிகிரியா, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா மற்றும் யால உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை வந்தடைந்த போலந்து சுற்றுலாப் பயணிகள் குழுவை இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியக அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
 

Leave a comment

Comment