TamilsGuide

மக்கள் திலகம் நினைவு தினம்

அறிஞர் அண்ணா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 இல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில்...
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அண்ணாவை நோக்கி முதல்வர் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது? அது உங்கள் சொந்த பணமா? அல்லது அரசு பணமா? அல்லது உங்கள் கட்சி செலவா? என்று கேட்க,
பேரறிஞர் அண்ணா சபையை சுற்றி பார்த்து உங்கள் இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.
மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அனந்தநாயகி மீண்டும் கேட்க,
அறிஞர் அண்ணா எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை. தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை.
செலவான தொகை ₹125000/-( ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்) மொத்தமும் இங்கே இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி #MGR அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ.... ஆதாரத்தை காட்டினார்..!

நேற்று அவர் அவைக்கு வரவில்லை அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டிடம் தாண்டி கேட்டுக் கொண்டே இருந்தது.
வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கி செதுக்கி தன்னை பக்குவப்படுத்தி கொண்டவர் #MGR
பட்டினியில் கிடந்த போதும் சரி பணம் மழை போல அவர் வாழ்வில் கொட்டிய போதும் தன்னிலை தவறாதவர் #MGR.
அறிஞர் அண்ணா சிகிச்சைக்கான தொகையை ஏற்று கொண்டதாக MGR ஒரு போதும் ஒரு நாளும் ஒரு இடத்தில் கூட சொன்னது இல்லை!
அறிஞர் அண்ணா சொன்ன பிறகே நாட்டுக்கு இந்த உண்மை தெரிந்தது!
இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்!
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்!

#டிசம்பர்24 M.G.R. நினைவு தினம்.
 

Leave a comment

Comment