TamilsGuide

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர்.

இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில், கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த சோதனை நடத்தப்பட்டது.

மசாஜ் நிலையமாக செயல்பட்டு விபச்சார சேவைகளை வழங்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த நிறுவனத்தை நிர்வகித்ததாக கைது செய்யப்பட்ட நபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

சோதனையின் போது அந்த வளாகத்தில் இருந்த ஒன்பது வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டனர். 

25 முதல் 41 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்கள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்து சந்தேக நபர்களும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment