TamilsGuide

AI-ஐ ஆதரிக்க வேண்டாம்..!- நடிகை ஸ்ரீலீலா வேதனை

தவறான முறையில் ஏஐ பயன்பாடு இருப்பதாக நடிகை ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை ஸ்ரீலீலா கூறியதாவது:-

AI-ஆல் உருவாக்கப்படும் தவறான விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல.

என்னுடைய வேலையில் கவனம் செலுத்தியதால் என்னால் இணையத்தில் நடந்தவற்றை மற்றவர்களின் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் இது அருவருப்பாக உள்ளது. அனைவரும் எங்களுக்காக துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment