TamilsGuide

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் புனரமைப்பு நடவடிக்கை

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் நாடளாவிய ரீதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்ததுடள் வீடுகள் மற்றும் பொது இடங்கள் அரச நிறுவனங்களும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அரச நிறுவனங்கள், பொது இடங்கள் மக்கள் குடியிருப்புக்களில் இலங்கை விமான படையினர் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்

கொச்சிக்கடை, தோப்புவ, தளுபொத்த, வைக்கால் மற்றும் மொரவேவ ஆகிய பகுதிகளில் விமானப்படையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
 

Leave a comment

Comment