TamilsGuide

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை இலங்கை விமானப்படையினர் வான்வழி மற்றும் தரைவழி ஊடக விநியோகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றும் ( 07) திகன, பலவிய, அஸ்கிரிய, அம்பலியத்த, நுவரெலியா, கோனபொல, மீமுரே, உடுகும்புர, மலகொல்ல மற்றும் உடுதும்பர ஆகிய இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை விமானப்படை பெல் 412, பெல் 212, MI17 மற்றும் Y12 விமானங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன.
 

Leave a comment

Comment