TamilsGuide

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு

இலங்கை முழுவதும் ஏற்பட்ட பேரழிவு தரும் சூறாவளி மற்றும் வெள்ளம் தீவு நாட்டில் தெளிவான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வியாழக்கிழமை (04) கூறியது.

அதே நேரத்தில் இழப்புகள் குறித்த முழுமையான மதிப்பீடு முடிந்ததும் அதன் உதவியை விரிவுபடுத்தத் தயாராக உள்ளதாகவும் உறுதியளித்தது.

இது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கமான ஊடகவியலாளர் சந்திப்பில்  IMF இன் தொடர்பாடல் துறை பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார். 

அத்துடன், 

இலங்கை மக்களுக்கு எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன, மேலும் நிகழ்ந்த உயிர் இழப்புக்கு நாங்கள் துக்கப்படுகிறோம்.

அதேநேரம், கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கின்றோம்.

பேரழிவின் மனிதாபிமான, சமூக மற்றும் பொருளாதார சேதங்களைப் புரிந்துகொள்ள, இலங்கை அதிகாரிகள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பிற சகாக்களுடன் IMF நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.

இலங்கையின் பெரும்பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

அந்த அடிப்படையில், குறிப்பிடத்தக்க மனித உயிரிழப்புக்கு மேலதிகமாக, பொருளாதார நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கம் சர்வதேச பங்காளர்களுடன் பேரிடருக்குப் பிந்தைய சேத மதிப்பீட்டை முடித்தவுடன், IMF அடுத்த கட்ட விடயம் தொரட்பில் தெளிவான நுண்ணறிவைப் பெறும்.

அதாவது, பேரிடர் சேதத்திற்குப் பிந்தைய விரைவான மதிப்பீடு முடிந்ததும், பொருளாதார நிலைமையை நாங்கள் சிறப்பாக மதிப்பிடுவோம்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் இலங்கையின் மீட்பு, சீர்திருத்தம் மற்றும் மீள்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்.

சூறாவளிக்கு முன்பே, கடந்த ஒக்டோபர் மாதத்தில் திட்டம் தொடர்பான 5 ஆவது மீளாய்வில் மதிப்பாய்வில் IMF பணியாளரக்ளும் இலங்கை அரசாங்கமும் ஏற்கனவே பணியாளர் நிலை ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

முக்கியமாக, பேரழிவின் பின்னணியில் இலங்கைக்கான ஆதரவை விரிவுபடுத்துவதற்கான வழிகளை IMF இப்போது மதிப்பீடு செய்து வருகின்றது. 

இரண்டு வாரங்களுக்குள் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஆறாவது தவணையான சுமார் 350 மில்லியன் டொலர்களை இலங்கை விரைவாகப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 15 அன்று வாரியம் திட்டமிட்டபடி கூடும் இதன்போது, இலங்கை தொடர்பில் மேலும் முடிவுகள் எடுக்கப்படும் – என்றார்
 

Leave a comment

Comment