நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தினால் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த செயல்முறையின் மூலம் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா பீன்ஸ் போன்ற கட்டாய காப்பீடு செய்யப்பட்ட பயிர்களின் சேதங்கள் மதிப்பிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.
சேதத்தின் அளவைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற தற்போது சாத்தியமில்லை என்பதால், வெள்ளம் வடிந்தவுடன் உடனடியாக விவசாய சேவை மையங்களில் கிடைக்கும் அறிக்கைப் புத்தகங்களில் சேதத்தைப் பதிவு செய்யுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ளம் வடியவில்லை என்றால், விவசாயிகள் அந்தந்த விவசாய சேவை மைய அதிகாரி அல்லது விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரை நாடலாம்.
விவசாயிகள் சேதங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க ஒரு மாத கால அவகாசம் உள்ளது.
மேலும் இழப்பீட்டைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
சேத அறிக்கையிடல் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் விசாரணைகளுக்கு, வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தின் அவசர தொலைபேசி எண்ணான 1918ஐ தொடர்பு கொள்ளலாம்.


