இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பல வீதிகளை மீண்டும் போக்குவரத்து நடவடிக்கைக்காக திறப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, எல்ல-வெல்லவாய, பாதெனியா-அனுராதபுரம் மற்றும் குருநாகல்-திருகோணமலை வீதிகள் தற்போது வாகனப் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் உள்ள பல வீதிகளும் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதகமான வானிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல வீதிகள் முன்னர் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


