TamilsGuide

மீட்பு பணிகளுக்காக இந்தியாவின் ஹெலிகொப்டர்கள்

இலங்கையில் நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மீட்பு நடவடிக்கைகளுக்கு ஹெலிகொப்டர்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மேலும் அதில் உள்ள ஹெலிகொப்டர்கள் இந்த மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிக்கைகளின்படி, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் இலங்கை அரசாங்கம் விடுத்த முறையான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment