நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் ஒரு பெண், அவரது மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தையும் அடங்குவர்.
நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளுடன் உள்ளூர்வாசிகள் விரிவான மீட்பு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
இறந்தவர்களின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக, நாவலப்பிட்டி பகுதியில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜெயசுந்தர தெரிவித்தார்.


