TamilsGuide

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், வெள்ளம் மற்றும் பல ரயில் பாதைகளில் மரங்கள் விழும் அபாயம் அதிகரித்து வருகின்றது.

இதனால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டாரா தெரிவித்தார்.
 

Leave a comment

Comment