TamilsGuide

இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு பெரும் வெள்ள அபாய எச்சரிக்கை

அதிக மழைப்பொழிவு மற்றும் நீர்மட்டம் உயர்வதால் களு கங்கை படுக்கையின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பெரும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் தகவலின்படி, ஆபத்தில் உள்ள பகுதிகளில் பின்வருவன அடங்கும்:

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்டை, அயகம, எலபாத்தை

களுத்துறை மாவட்டம்: களுத்துறை, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல, அகலவத்தை

குறித்தப் பகுதிகளில் வசிப்பவர்களும், அங்குள்ள வீதிகளினூடாக பயணிப்பவர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் பிறப்பிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment