TamilsGuide

வவுனியா சிங்கர் காட்சியறையில் தீப்பரவல்! கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசம்!

வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சியறையில் இன்றையதினம் காலை திடீர் தீ ஏற்ப்பட்ட நிலையில் காட்சியறை முற்றாக எரிந்துள்ளது.

குறித்த காட்சியறையின் மேற்தளத்தில் இன்றையதினம் காலை திடீர் தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. அதனை அணைக்க ஊழியர்களால் முயற்சி செய்யப்பட்ட நிலையில் கட்டுங்கடங்காத தீ அனைத்து இடங்களிலும் பரவி காட்சியறை முழுவதும் பரவியது

சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவின் ஊழியர்கள் பொதுமக்கள் இளைஞர்கள், தீயை அணைக்க கடும் பிரயத்தனத்தை முன்னெடுத்த போதும் கட்டுங்கடங்காத தீ அனைத்து இடங்களிலும் பரவி காட்சியறை முழுதும் முற்றாக எரிந்து நாசமாகியது. தீயை அணைப்பதற்காக இராணுவம் பொலிசாரின் உதவிகளும் கோரப்பட்டிருந்தது.

தீப்பரவல் சிங்கர் காட்சியறைக்கு அருகாமையில் இருந்த ஏனைய வியாபார நிலையங்களுக்கும் பரவமுற்பட்ட நிலையில் கடும் முயசிக்கு மத்தியில் அது தடுக்கப்பட்டது.

இவ் விபத்தில் சிங்கர் காட்சியறையில் இருந்த கோடிக்கணக்காண இலத்திரனியல் பொருட்கள்,மற்றும் ஆவணங்கள், தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வவுனியா பொலிசார் தடயவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Comment