TamilsGuide

200,000 புதிய வரி செலுத்துவோரை பதிவு செய்த இறைவரித் திணைக்களம்

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 200,000 புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.

அதே காலகட்டத்தில் 18,000 புதிய நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைக் குறிப்பட்ட அவர்,  கடந்த ஆண்டை விட 18% அதிக வருவாய் இலக்கு திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் உள் நாட்டு இறைவரித் திணைக்களம் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வருவாய் வசூலை அடைந்தது,

அதன்படி திணைக்களம் 2 டிரில்லியன் ரூபா இலக்கை விஞ்சியமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment