TamilsGuide

அமெரிக்காவில் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியை - ஸ்னாப்சாட் படங்களால் அதிர்ச்சி

அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாநிலத்தில், பள்ளியில் பணிபுரிந்த 30 வயதான ஆசிரியை, தான் பணிபுரிந்த பள்ளியின் நடுத்தர வயது மாணவர்களைப் பணம், மது மற்றும் போதைப்பொருள் கொடுத்துத் தூண்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியை பல மாணவர்களுக்குச் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா வழங்கி, 100 டாலருக்கும் அதிகமாகப் பணம் கொடுத்து பாலியல் செயல்களில் ஈடுபடச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் சில மாணவர்களுக்குச் ‘ஸ்னாப்சாட்’மூலம் ஆபாசப் படங்களையும் அனுப்பியுள்ளார்.

முதலில் அவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, குழந்தைகளைக் கடத்துதல் உட்பட 19 கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இறுதியில் மூன்று குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment