TamilsGuide

மூதூர் – ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் மூவர் கைது

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடனும், சட்டவிரோத ஆமை இறைச்சியுடனும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் சுற்றி வளைப்பானது நேற்று (22) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மூதூர் கங்கை பாலத்தில் வைத்து 28 வயதுடைய சந்தேக நபரொருவரை சோதனைக்குட்படுத்தியபோது 5100 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவர் கிண்ணியா -பூவரசன்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மூதூர் – பச்சநூர் சந்தியில் வைத்து 900, 700 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சியுடன் உப்பூறல், சஹாயபுரம் பகுதிகளைச் சேர்ந்த 23,45 வயதுகளையுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆமை இறைச்சிகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மோதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment