யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்த நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வேயில் இருந்து , விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டில் உணவருந்திய பின்னர் , கை கழுவதற்க்காக கிணற்றடிக்கு சென்றவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


