TamilsGuide

50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி மீண்டும் வெளியாகும் SHOLAY

இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் இன்றளவும் பலரால் நினைவு கூறப்படுவது 'ஷோலே'. 1975-ல் வெளிவந்த இப்படத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், ஹேமமாலினி, ஜெயாபச்சன், அம்ஜத்கான் ஆகியோர் நடித்திருந்தனர்.

கொள்ளையர்கள் அட்டகாசம் தலைவிரித்தாடும் ஊரில் இருந்து மக்களை காப்பற்ற திருடர்களான தர்மேந்திரா மற்றும் அமிதாப்பை சஞ்சீவ்குமார் அழைத்து வர, அவர்கள் ஊரோடு ஒன்றி கொள்ளையர்களை ஒழிக்கப்பாடுபடுவதே படத்தின் கதைக்களம்.

இந்த படத்தில் ஜோடியாக நடித்த தர்மேந்திரா - ஹேமா மாலினி , அமிதாப் - ஜெயா ஆகியோர் திருமணம் செய்து நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறினர்.

அந்தக் காலக்கட்டத்தில் வசூலில் சாதனை படைத்த 'ஷோலே' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் 12-ந்தேதி 4K மற்றும் டால்பி 5.1 ஒலியில் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி வெளியாக உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். 
 

Leave a comment

Comment