TamilsGuide

குருக்கள் மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் இன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு இன்றைய தினம் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி ஹோமத்தை தொடர்ந்து , விசேட அபிசேக ஆராதானை நடைபெற்று, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, ஐயப்ப சுவாமி புனித விரதமாலை அணியும் நிகழ்வு நடைபெற்றது.

48 நாட்கள் விரதத்தின் கலியுக வரதன்,.ஹரிகரசுதன் ஐயப்பசுவாமியின் அருள் வேண்டி பல நூற்றுக்கணக்கான பக்தர்களும் ,.சுவாமிமார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விரதப்பூஜை வழிபாடுகள் யாவும் விஸ்வப்பிரம்மஸ்ரீ சுபேஸ்வரன் குரு சுவாமி தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது குருசுவாமியினால் விரதம் அனுஷ்டிக்கும் சுவாமிகளுக்கு புனிதமாலை அணிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment