எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். வில்லனாக பிரித்விராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.
முன்னதாக இப்படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் முதல் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டனர்.கையில் துப்பாக்கி உடன் பிரியங்கா சோப்ரா மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


