TamilsGuide

பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு இஸ்ரேல் ஒரு பெரும் அச்சுறுத்தல் - Oxford Union Society தீர்மானம்

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

இந்நிலையில், "ஈரானை விட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான்" என அறிவித்து Oxford Union Society தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான விவாத சங்கமான Oxford Union Society-யில், பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.
 

Leave a comment

Comment