ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.
இந்த நிறுவனம், ஆகிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட மார்கோ கிளிங்கே நிறுவனத்துடன் இணைந்து, ஏவுகணை மோட்டார்களில் பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்க்ளோரேட் போன்ற ரசாயனப் பொருட்களை ஈரான் பெற உதவியதாக அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஈரான் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆறு இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


