இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலக நாடுகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய் எழுதிய பிளெஷ் என்னும் புனைவு நாவலுக்கு அறிவிக்கப்பட்டது.
கனடாவில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து தற்போது ஹங்கேரி நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இது பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவு குறித்து பேசப்படுவதாக அமைந்துள்ளது.
லண்டனில் அவருக்கு புக்கர் பரிசுக்கான நினைவு சின்ன கோப்பையும், ரூ.55 லட்சத்திற்கான (66 ஆயிரம் டாலர்கள்) காசோலையும் வழங்கப்பட்டது.


