1950-1980 கால கட்டத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் எனச் சொல்லுவோம்.. காரணம் இதில் அஷ்டாவதானி எனப்படும் எட்டு பேரின் பங்கு அப்படி...
எம்.ஜிஆர், சிவாஜி, எம்.எஸ்.வி, கே.வி.எம்... டி.எம்.எஸ்..கண்ணதாசன், வாலி ஆகிய ஏழு பேருடன் இன்னொருவர் பி.சுசீலாம்மா அவர்கள்.
எந்த தமிழ் சினிமா ஹிட்டானாலும்,
அதில் இந்த எட்டு பேரில் ஒருவரின் பங்கு இல்லாவிட்டால்தான் ஆச்சர்யமே!
தமிழை தாலாட்டி வளர்த்த இசை எழிலரசி.
கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் இடையிடையே விக்கல் எடுப்பதுபோல் நக்கலுடன்பாடும்," உன்னை கண் தேடுதே" என்ற பாடலை சுசீலா பாடிய விதம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து ஜிகே ராமநாதன்
கே.வி மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கினாலும் சுசீலாவை பொறுத்தவரை அவருக்கு பட்டை தீட்டியவர்கள், ஏணி போல் திகழ்ந்தவர்கள் என்றால் அது
மெல்லிசை மன்னர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
அவர்கள் தான்
1960களில் முழுக்க முழுக்க பெண் குரல் என்றால் அது பி சுசீலா அவர்கள்
தான் நம்பர் ஒன் என்ற அளவில் உயரத்திற்கு கொண்டுபோய் வைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள்..
நூற்றுக்கணக்கான டூயட் பாட்டுகளை டி.எம்.எஸ் உடன் சேர்ந்து பி சுசீலா பாடி வைத்தவை இன்றும் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றன.
வசந்த மாளிகை படத்தின் மயக்கமென்ன இந்த மௌனமென்ன..
உலகம் சுற்றும் வாலிபன் பட பச்சைக்கிளி முத்துச்சரம்.. எவ்வளவு ஹிட் பாடல்கள் !!!
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு முறை பேசும் போது சொன்னார்.. நம்முடைய பி.சுசீலாவை தென்னாட்டு லதா மங்கேஷ்கர் என்று பலரும் சொல்வதை குறிப்பிட்டு அவர் கோபப்பட்டார். வேண்டுமானால் லதாவை வடநாட்டு சுசீலா என சொல்லிக்கொள்ளுங்கள் என்று எம்ஜிஆர் ஆதங்கப்பட்டார்.
நீ இல்லாத உலகினிலே.. (தெய்வத்தின் தெய்வம்)
காதல் சிறகை காற்றினிலே.. (பாலும் பழமும்)
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் (புதிய பறவை)
நாளை இந்த வேளை பார்த்து ( உயர்ந்த மனிதன்)
ஓ..ஓ..ஓடும் மேகங்களே (நீல வானம்)
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா (அன்னமிட்டகை)
எங்கிருந்தோ ஆசைகள் (சந்திரோதயம்)
இன்று வந்த இந்த மயக்கம் (காசேதான் கடவுளடா)
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும் (நூற்றுக்கு நூறு)
சோலை புஷ்பங்களே என்.. (இங்கேயும் ஒரு கங்கை)
கண்ணுக்கு மை அழகு (புதிய முகம்)
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் (சிகப்பு மல்லி)
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்(நானே ராஜா நானே மந்திரி)
தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், என பல ரசங்களில் பி.சுசீலாவினது குரல் தமிழ் சினிமாவில் ஒலித்து இசை ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது.
"கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ"….
"கனிய கனிய மழலை பேசும் கண்மணி"
"பாலிருக்கும் பழமிருக்கும்"
"ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்"
"நான் பேசநினைப்பதெல்லாம்"…
"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்" ..
என பல பாடல்களில் பி.சுசீலா இசை வான வீதியில் சிறகை விரித்து பறந்தார்.
பி.சுசீலா பாடிய "சொன்னது நீதானா" …முத்தான முத்தல்லவோ"… "என்ன நினைத்து என்னை அழைத்தாயோ". ’பார்த்த ஞாபகம் இல்லையோ’, ’உன்னை ஓன்று கேட்பேன்’, ’சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்ததுடன் பாரெங்கும் சுசீலாவின் புகழை ஓங்கி உரைத்தது.
ஆயிரத்தில் ஒருவன்”. படத்தின் அனைத்து பாடல்களும் பி.சுசீலாவின் குரலால் சூப்பர் ஹிட் பாடல்களாகின. துள்ளும் இளமையுடன் ஜெயலலிதா அறிமுகமாகும் “பருவம் எனது பாடல்”… “ஆடாமல் ஆடுகிறேன்”. “உன்னை நான் சந்தித்தேன்”, “நாணமோ இன்னும் நாணமோ” என பி. சுசீலா பாடிய நான்கு பாடல்களும் ஹிட் அடித்தன.
1952ல் பாட ஆரம்பித்து மூன்று தலை முறைகளுக்கு கொடிகட்டிப் பறந்து சாதனை படைத்தவர் சுசிலாம்மா
அவர்கள்.
எம்ஜிஆர் – சிவாஜி தலைமுறை என்றில்லாமல் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘அடுத்த வாரிசு’ திரைப்படத்தில் ’பேசக்கூடாது’ என்ற பாடலையும்….
விஜய்காந்த்-சுகன்யா நடிப்பில் வெளியான ’சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில் வந்த ’முத்துமணி மாலை’ என்ற பாடலையும் .. ’
கேளடி கண்மணி’ திரைப்படத்தில் ’கற்பூர பொம்மை ஒன்று’ என்ற பாடலையும் பாடி அடுத்த தலைமுறைக்கும் ஒலித்த பி.சுசீலாலாம்மாவின் குரலை யாருக்கு
தான் பிடிக்காது.
-பிரசாந்த்!


